Tuesday, September 18, 2007

காதலே ஓடிவிடு

காதலியே உனைக் கைபிடிக்க
என் கையை நீட்டியபடியே
உனை நோக்கி நான் வந்தேன்
ஆனால் உன் கைகளோ
இன்னொருவன் கைகளை இறுகப் பிடித்திருந்தது
அன்று செயலிழந்த என் கைகள்
இன்னும் தன் உணர்வுகளை மீளப் பெறவில்லை

காதலியே உனைப் பார்பதற்காய்
என் கால்களின் வலிமையை அதிகமாக்கி
பல மைல் தூரம் ஓடோடி நான் வந்தேன்
நீயோ சொகுசுக் காரொன்றில்
இன்னொருவனுடன் அருகே அமர்ந்திருந்தாய்
அன்று செயலிழந்த என் கால்கள்
இன்னும் ஓர் அடி கூட நகரவில்லை

காதலியே உனை அணைப்பதற்காய்
என் நெஞ்சத்தின் இனிமைகளை அதிகமாக்கி
உன் அருகே விரைவாக நான் வந்தேன்
என்ன கொடுமை இது
உன் நெஞ்சை அணைத்தபடி இன்னொருவன்
அன்று மூடிய என் நெஞ்சத்தின் உணர்வுகள்
இன்னும் உறக்கத்தில் இருந்து எழவேயில்லை

காதலியே உனை மணமுடிப்பதற்காய்
மலர் மாலை சகிதம் மகிழ்ச்சியுடன்
உன் வீடு தேடி நான் வந்தேன்
நீயோ மாற்றான் ஒருவனின் மனைவியாய் இருந்தாய்
அன்று உடைந்த என் இதயம்
எவராலும் பொருத்த முடியா அவல நிலையில்
மீண்டும் ஓர் முறை நான் காதலித்தால்
என் இதயம் அழிந்தே மாய்ந்து விடும்
காதலே ஓடிவிடு! என்னை வாழ விடு!

No comments: