Wednesday, June 16, 2010

பத்து வயதினிலே சுமைதாங்கியானாய்

இவ் உலகில்
நான் ஏன் பிறந்தேன்
கேள்வி ஒன்று
எழுவதுண்டு என் மனதில்
பலவேளை
விடை தெரியாமல்
விழி பிதுங்கி நிற்பதுண்டு


எம் குடும்பத்தின் குலவிளக்காய்
நிதுரா நீ வந்துதித்த பின்னாலே
உணர்ந்து கொண்டேன்
என் பிறப்பிற்கும்
ஓர் அர்த்தம் உண்டென்று
உன்னைப் போல் ஓர் பிள்ளை
இவ் உலகிற்கு தருவதற்காய்
இயற்கை அன்னை அவள்
என்னைப் படைத்திருப்பாள்
இப் பூமிப் பந்தினிலே

பச்சைக் குழந்தையாய் இருந்தபோது
படு சுட்டி நீ
என் மடியினில் உன் தலை வைத்து
கால் அசைத்து பின் அமைதியாய்
துயிலும் உன் அழகு முகம்
மறக்க முடியா நினைவுகளாய்
மனதில் உறைந்தே இருக்கிறது

நான்கு ஐந்து வயதினிலே
"Under ground, Over ground"
"Hallunda, mannunda"
என்று
நீ சொல்லிய நகைச்சுவைகள்
உன் மழலையில் மகிழ்ந்திருந்தோம்
நாமெல்லாம்....

பத்து வயதினிலே நீ
சுமைதாங்கியானாய்
எம் குடும்பத்திற்கே!
அப்பா ஆஸ்பத்திரியில் படுத்திருந்தால்
விடிகாலை ஆறு மணிக்கே
ஆயராவாய் நாள் தவறாமல்
அதன் பின்பே செல்வாய் பாடசாலைக்கே
மறக்காமல் வருவாய் மாலையிலும்

அன்பைச் சொரிந்தாய்
எம் மீதெல்லாம்
அன்பாகப் பேசிடுவாய்
ஆத்திரம் வந்துவிட்டால்
அட்டகாசமாய்ப் கத்திடுவாய்
பத்து நிமிடம் பேசாமல் இருக்கமாட்டாய்
இப்போதும் கோவமா என்றிடுவாய்

ஆண்டவன் தந்த அற்புதப் பிறவி நீ
எம் குடும்பத்தைக் காக்க வந்த
காவல் தெய்வம் நீ
குடும்பத்தின் துன்பத்தில் துயரத்தில்
எல்லாம் பங்கெடுப்பாய்
துணிவாக நின்று எம் துயர் தீர்க்க
தோள் கொடுப்பாய்

பாடசாலையிலே நீ
பலே கெட்டிக்காரி
குறும்புத் தனத்தில் நீதான்
முதல் இடத்தில்
எல்லோரும் உன்னில்
அளவில்லா அன்புடனே
சோட்டி என்றே அழைத்திடுவார்
உனைத் தூக்கி விளையாடி
மகிழ்ந்திடுவார்

நீ எனக்கு மகளல்ல
என் தாயின் மறுபிறப்பு
உன் அம்மாவின்
அம்மாவின் காபன் கொப்பி நீ
அக்காவின் செல்லத் தங்கை நீ
ஒரு நாள் நீ எம் வீட்டில்
இல்லையென்றால்
எம் வீடே அமைதியாய்
உறங்கிவிடும்

உன்னை எமக்கு அளித்ததற்காய்
நன்றி சொல்கின்றோம் அந்த
இயற்கை அன்னைக்கே!

Thursday, May 13, 2010

ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும் - ஐரோப்பாவில் போராட்டம்


போதும் போதும் பொறுத்தது போதும்

ஆண்களே நீங்களெல்லாம் பொறுத்தது போதும்

பொங்கி எழு ஆண்மகனே

சங்கே முழங்கு என்று பொங்கி எழு ஆண்மகனே

இழந்த உன் உரிமையை வென்று எடுக்க

பொங்கி எழு ஆண்மகனே


அன்று நீ சமையல் அறையை எட்டியும் பார்க்கவில்லை

இன்றோ சமையலிலே நீதான் முன்னணியில்

சட்டி பானை என்றால் என்னவென்றே தெரியாமால் நீ இருந்தாய்

இன்றோ சட்டி பானை கழுவுவதில்

நீதான் முதன்மையாய் இருக்கின்றாய்

டிஸ்வோசர் வேண்ட நீ முயற்சி எடுத்திட்டால்

பெண்ணோ அதை தட்டியே கழித்திடுவாள்


ஆண் சிங்கமாய் அன்று நீ இருந்தாய்

இன்றோ அடுப்பூதும் சுண்டெலியாய் நீ இருக்கின்றாய்

அம்மாவின் கையாலே அறுசுவையும் நீ உண்டாய்

இன்றோ ஐரோப்பாவில் அடுப்படியில் நீ வெந்தே சாகின்றாய்

ஆண்கள் கட்டாயம் சம உரிமை பெற்றே ஆகவேண்டும்

சமையலிலே பெண்ணும் சரி பாதி பங்கு வகித்தே தீரவேண்டும்


அன்று அம்மா அம்மா என்று தான்

அழுதன பிள்ளைகள் எல்லாமே

இன்று அப்பா அப்பா என்று அழுவது ஏனோ

பிள்ளைப் பராமரிப்பில் பெண்களுக்கும்

சம பங்கு தந்தே தீரவேண்டும்

பத்து மாதம் சுமப்பது பெண்களென்றால்

பின்வரும் பத்து வருடங்களும்

ஆண்களா பிள்ளைகளைச் சுமக்கவேண்டும்


சம்பளம் வந்தவுடன் சட்டையும் சீலையும்

வேண்டத் திரிகின்றார் பெண்களெல்லாம்

ஆண்களுக்கும் சம உரிமை வேண்டும்

அவர்களையும் மனிதர்களாய் மதிக்கவேண்டும்

அவர்களுக்கும் உடுபுடவை வேண்ட சம உரிமை வேண்டும்

கோட்டும் சூட்டும் வேண்ட அவர்களுக்கும்

நீ பணம் கொடுக்கவேண்டும்


விருந்தாளிகள் வீட்டுக்கு வருவதென்றால்

அன்று அடுப்படியில் நிற்பதெல்லாம்

ஆண்களாய் இருப்பது முற்றாக மாறவேண்டும்

விருந்தாளிகளுடன் கதை அளப்பதெல்லாம் பெண்களென்றால்

வேலை செய்வதெல்லாம் ஆண்களா

பொங்கி எழு ஆண்மகனே!

சரி பாதி உரிமைக்காய்

இன்றே போர்க்கொடி உயர்த்திடுவாய்


நகை நகையாய் வேண்டி நம் பணத்தை எல்லாம்

கழுத்திலும் கையிலும் பொத்திப் பொத்தி

வைத்திருக்கும் பெண் அவளே

ஆணுக்கும் ஆசைகள் உண்டென்று

நீ என்றாவது எண்ணிப் பார்த்ததுண்டா

இன்றே அரைவாசி நகையை பெறுமட்டும்

போராட்டம் நடாத்திடு ஆண்மகனே!


அரைப் போத்தல் தண்ணி அடித்திட்டால்

அநியாயம் முழுக்க ஆண்தான் செய்திட்டான்

என்று பிதற்றுகின்ற பெண்ணே

நீ வேண்டும் சாறிக்கும் நகைக்கும்

அழகுசாதனப் பொருளுக்கும்

யார் தருகின்றார் பணம்

அளவாய் தண்ணி அடிப்பதற்கு

ஆண்கள் கட்டாயம் உரிமை பெற்றே ஆகவேண்டும்!


ஆணுக்குச் சமத்துவம் வேண்டி

ஐரோப்பிய நாடெல்லாம்

மூலை முடுக்கெல்லாம்

ஆண்கள் போராட்டம் நடாத்தவேண்டும்


சீறுகின்ற பெண்ணை

வீட்டில் நீ ஓர் சிரிப்பால் மழுப்புவதை

நான் நன்கறிவேன்

இழந்த ஆணின் உரிமைகளை

அகிம்சையால் வென்றெடுக்க

ஒன்று பட்டுப் போராடி வெற்றி பெறவேண்டும் நீ

உன் போராட்டம் வெற்றி பெறும்

பெண்ணுடன் சமத்துவமாய்

ஆணே கட்டாயம் நீ வாழ்ந்திடுவாய்!

குரும்பையூர் பொன் சிவராசா

நேர்த்தியான, உடனடிச் செய்திகளுக்கும், சிறந்த கவிதைகள் மற்றும் நகைச்சுவை என்பவற்கிற்கும் www.tamilsworld.net என்ற இணையத்தளத்தை பாருங்கள்

Tuesday, May 4, 2010

சிரி! சிரி! வயிறு குலுங்கச் சிரி!!


கணவன்: மருந்துப் போத்தலை ஏன் தலையில் தடவியபடி இருக்கிறாய்?

மனைவி: டாக்டர் தான் தலை வலிச்சா இதை தடவச் சொன்னார்.

கணவன்: தடவச் சொன்னபடியால் தப்பித்தாய், குடிக்கச் சொல்லியிருந்தால், போத்தலை உடைத்து சாப்பிட்டிருப்பாய்.



டாக்டர்: நோயாளி ஒரு மணி நேரத்துக்கு முன்பே இறந்து விட்டார்.

மோகன்: இருக்காதே நான் 15 நிமிடத்துக்கு முந்தி அவருடன் கதைத்தேனே.

டாக்டர்: நீங்கள் தானே கதைதீர்கள் அவர் கதைக்கவில்லையே.



ஒருவர்: எல்லா டாக்டர்களும் ஏன் நின்று கொண்டே சத்திர சிகிச்சை செய்கிறார்கள்

மற்றவர்: கடவுளாக நம்புகிறோம் என்று சொல்வதால் அவர்களும் நின்றே கொல்லுகிறார்கள்


மேலதிகாரி: கொலை வழக்கை உங்களிட்டை ஒப்படைச்சோமே என்ன கண்டு பிடித்தீர்கள்

காவலர்: கொலை செய்யப்பட்டவர் கொலை செய்யப்படுவதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு கூட உயிருடன் இருந்திருக்கிறார்


டாக்டர்: உடம்பு பலமாவதற்கு மருந்து எழுதித் தந்தேனே ஒழுங்காகக் குடித்தீர்களா

நோயாளி: மூடியைத் திறக்க முடியவில்லையே டாக்டர் அதுக்காகத் தான் இப்போ வந்திருக்கிறேன்


தலைவர்: மரத்துக்கெல்லாம் திரிசா, நமீதா, அசின் என்று தலைவர் பேர் வைக்கிறாரே ஒன்றும் விளங்குது இல்லை

தொண்டர்: அப்பிடிப் பேர் வைச்சாத்தானாம் எல்லோரும் மரத்தை கவனமாக வளர்ப்பினமாம்

வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச் சுவைக்கு www.tamilsworld.net இணையத் தளத்தை பார்வையிடுங்கள்.

Thursday, April 1, 2010

அதில் ஓர் சுகமுண்டு

மறக்க முடியுமா
எம் ஊரின் மணிகடைச் சந்தி
எம் இளமை பருவத்தை
இனிமை ஆக்கிய
இதய பூமி அது
தொட்டு வணங்குகிறேன்
சந்தியின் அந்தப் படிக்கட்டை
கட்டையில் நான் போனாலும்
அச் சந்தியைக் கடந்தே
என் உடல் போகவேண்டும்
என்றொரு ஆசை
பாழும் சிங்கள ராணுவம்
எம் மண்ணை விட்டகன்றால்
இன்னும் ஓர் முறை
அந்தப் படியின் மடியில்
ஆற அமர்ந்திருந்து
அரட்டை அடிக்க ஓர் ஆசை

கூடியிருந்து கும்மாளம்
அடித்தவைகள்
இப்போதும் மனதைக் குளிரவைக்கும்
பாடிய பாட்டுக்கள்
எத்தனை எத்தனை
வீதியால் போவோரை
வித விதமாய் விமர்சிப்போம்
"ஒரு பின்னலை முன்னே விட்டு
பின்னிப் பின்னிப் போகிறா"
"கன்னம் கறுத்த குயில்
நிறத்தவளே"
கலகலப்பாய் கழியும்
ஒவ்வோர் நொடிப் பொழுதும்
காசிருந்தால் மணிகடையில்
வடை ஒன்றும் தேநீரும்
வாங்கிக் குடிப்போம்
வருசம் முப்பது போனாலும்
அதைப் போலொரு தேநீர்
அகிலத்தில் ஆருக்கும் கிடைக்காது
தனியாகக் குடிக்கமாட்டோம்
தாகம் எடுத்தாலும்
காசுகளை ஒன்று சேர்த்து
கணக்குப் பார்த்து
எல்லோரும் ஒன்று சேர்ந்தே
பருகிடுவோம் ஒற்றுமையாய்

முதல் நாள் பண்ணிய வம்புகள்
முழுக்க வரும் மணிகடைச் சந்திக்கே
இளநீர் மாங்காய் பறித்தவைகள்
இளசுகளின் காதல் கிசு கிசுக்கள்
கள்ளடித்தோர் விபரங்கள்
எல்லாம் கடித்தெடுப்போம்
அதில் ஓர் சுகமுண்டு

எம் இளமைப் பருவத்தை
இனிமை ஆக்கிய
அந்த புனிதமான சந்தி
இளையோர் பெரியோர் முதியோர்
எல்லோரும் சமத்துவமாய்
அமர்ந்திருந்து சந்தோசமாய்
கதை பகிரும் அந்தப் படிக்கட்டு
இதயத்தை விட்டு
என்றும் அகலாது விலகாது!

Monday, March 29, 2010

இரு முறை பிறந்தேன்

அம்மாவின் வயிற்றினிலே
பத்து மாதங்கள்
சுகமாய் தரித்திருந்து
இப் பூமிப் பந்தினில்
முதல் முறையாய்
பிறந்தேன் நான்
காலங்கள் ஓடியது
கல்யாணம் செய்துகொண்டேன்
வேதனைகள் சோதனைகள்
ஒவொன்றாய் வந்தபோது
ஒடிந்து போனேன்
நான் நானாக இல்லாதபோது
உயிர் தந்தாள்
வாழ வழி தந்தாள்
என் அன்பு மனைவியுமே
பிறந்தேன் நானும்
இரண்டாம் முறையாக!

Monday, March 22, 2010

காதல் கதை பேசும் கண் சிமிட்டும்

என் கைகளில் வலுவில்லை
கவிதைகள் வடிப்பதற்கு
மனம் மட்டும் அவளிற்காய்
ஓர் கவிதை புனைய விழைகிறது
மை தொட்டு காகிதத்தில் கை பரப்பி
எழுதவில்லை இக் கவிதை
இரத்தக் குழாய்களினால்
உதிரத்தை மை ஆக்கி
இதயத்தின் சுவர்களிலே வரைந்த கவிதை இது

இளமையிலே இனிதாக இருந்த வேளை
எழுதிக் குவித்தேன் நான் கவிதைகளை
ஒவ்வொன்றும் காதல் கதை பேசும்
கண் சிமிட்டும் கை அசைத்து
முத்தமிட்டு கவி பாடும்
என் கவிதைக்காய் தவமிருப்பாய்
என் கவிதைக்குள் நீ இருந்தாய்
உன்னுள்ளே என் கவிதை
உயிர்ப்பாய் உறவாடும்

என் வரவிற்காய் காத்திருப்பாய்
உறவிற்காய் தவமிருப்பாய்
அரவணைப்பாய் ஆரத் தழுவிடுவாய்
எனைக் காணாது
சில மணித் துளிகள் போனாலும்
மனம் ஒடிந்து துடிதுடித்துப் போய்விடுவாய்

இன்று
உடல் தளர்ந்து உளம் நொந்து
முதியோர் இல்லத்தில்
நான் முனகும் இக் கவிதை
கேட்பதற்கோ நீ இல்லை
என் அருகினிலே
நாட் கணக்காய்
மகளிர் மன்றம் என்றும்
மாரியம்மன் கோவில் என்றும்
மாறி மாறி ஓடித் திரிகின்றாய்
மறக்க முடியா
எம் காதல் நினைவுகளை
கவிதையாய் வடித்துவிட்டேன்
வந்து கேட்க மாட்டாயோ ஓர் முறை!

Sunday, March 21, 2010

கேட்க மாட்டாயோ ஓர் முறை

என் கைகளில் வலுவில்லை
கவிதைகள் வடிப்பதற்கு
மனம் மட்டும் அவளிற்காய்
ஓர் கவிதை புனைய விழைகிறது
மை தொட்டு காகிதத்தில் கை பரப்பி
எழுதவில்லை இக் கவிதை
இரத்தக் குழாய்களினால்
உதிரத்தை மை ஆக்கி
இதயத்தின் சுவர்களிலே வரைந்த கவிதை இது

இளமையிலே இனிதாக இருந்த வேளை
எழுதிக் குவித்தேன் நான் கவிதைகளை
ஒவ்வொன்றும் காதல் கதை பேசும்
கண் சிமிட்டும் கை அசைத்து
முத்தமிட்டு கவி பாடும்
என் கவிதைக்காய் தவமிருப்பாய்
என் கவிதைக்குள் நீ இருந்தாய்
உன்னுள்ளே என் கவிதை
உயிர்ப்பாய் உறவாடும்

என் வரவிற்காய் காத்திருப்பாய்
உறவிற்காய் தவமிருப்பாய்
அரவணைப்பாய் ஆரத் தழுவிடுவாய்
எனைக் காணாது
சில மணித் துளிகள் போனாலும்
மனம் ஒடிந்து துடிதுடித்துப் போய்விடுவாய்

இன்று
உடல் தளர்ந்து உளம் நொந்து
முதியோர் இல்லத்தில்
நான் முனகும் இக் கவிதை
கேட்பதற்கோ நீ இல்லை
என் அருகினிலே
நாட் கணக்காய்
மகளிர் மன்றம் என்றும்
மாரியம்மன் கோவில் என்றும்
மாறி மாறி ஓடித் திரிகின்றாய்
மறக்க முடியா
எம் காதல் நினைவுகளை
கவிதையாய் வடித்துவிட்டேன்
வந்து கேட்க மாட்டாயோ ஓர் முறை!