Thursday, May 1, 2008

தலித்துக்கள் விடுகின்ற கண்ணீர்

கண்ணீர் சொல்லும் கதைகள்
கவிதைகளாய் வெளிவந்தால்
காலத்தால் அழியாத
காவியங்கள் பல மலர்ந்திருக்கும்
அவை கதைகளாய் வெளிப்பட்டால்
உலகையே வியக்க வைத்திருக்கும்

தண்ணீர்ப் பஞ்சம்
தமிழ் நாட்டில்
தலைவிரித்தாடுவதால்
விவசாயிகள் கண்களிலே
கண்ணீர் ஆறாய்ப் பெருக்கெடுக்கிறது
அயல் மானிலத்தார்
தண்ணீர் கொடுக்க மறுத்தாலும்
எம் உழவர் துன்பத்தில்
பொழிகின்ற கண்ணீர்
நம் மண்ணில் சொரிவதனால்
விளையும் பயிர்கள் என்றே
நம்பிடுவோம் திடமாக!!!

ஆதி மனிதனையும்
வெட்கித் தலை குனிய வைக்கின்ற
சாதீயம் பேசி
குழி தோண்டிப் புதைக்கின்றார் நாகரீகத்தை
என்ன கொடுமை இது
தமிழ் நாட்டினிலே
தர்மம் செத்தது எப்போது?
ஊரின் நடுவே பெரும் சுவர் எழுப்பி
பிரித்து வைக்கின்றார் தலித் மக்களையே
கலக்கத்தில் தலித்துக்கள்
விடுகின்ற கண்ணீர்
உடைத்துவிடும் அச்சுவரை
பெற்றிடுவார் உரிமைதனை
நம்பிடுவோம் திடமாக!!!