Tuesday, June 17, 2008

என்னை நான் தேடுகிறேன்

தாயகத்தில் அன்று நான்
நானாக இருந்தேன் மகிழ்வாக
இன்று புலம் பெயர்நாட்டில்
நான் நானாக இல்லை என்பதனால்
என்னைத் தேடுகிறேன் என்னாளும்
வேறு சிலருக்காய் வாழ்கின்றேன்
இங்கே புதிய மனிதனாய்
மனிதப் பண்புகளை
மதித்தார்கள் அங்கே
மனிதன் பணப்பையை
மதிக்கிறார்கள் இங்கே
அதனால் என்னையே நான்
மாற்றிக்கொண்டேன் இவர்களுக்காய்
இப்போ தேடுகிறேன் என்னையே நான்!

Monday, June 16, 2008

ராணுவத்தின் வேட்டுக்கள்

பசியும் பட்டினியும்
கொலையும் கொள்ளையும்
கடத்தலும் கப்பம் கேட்டு மிரட்டுவதும்
வான்குண்டுத் தாக்குதலும்
கிளைமோரின் வெடிப்புகளும்
அகதியாய் இடம் பெயர்வுகளும்
அநியாயச் சாவுகளும்
இவையே எம் மண்ணில்
அன்றாட நிகழ்வுகளாய் ஆனபோதும்
விடிந்த பொழுதில் விழித்தெழுந்து
அல்லும் பகலும் அயராதுழைத்து
அம்மாவையும் அக்கா தங்கையையும்
அரணாகக் காத்து நின்ற
சின்னஞ் சிறுவனையும்
விட்டு வைக்கவில்லை
ராணுவத்தின் வேட்டுக்கள்.