Thursday, January 24, 2008

அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்

என்னவளே அழவேண்டாம்
உன்னை நான் அடித்ததற்காய்
அணைக்கும் என் கரங்கள்
அடிக்கவும் செய்கிறது
ஏன் என்று புரிகிறதா என்னவளே?
உன் மேல் கொண்ட அளவில்லா அன்பினால்தான்
ஆத்திரம் வருகிறது சிலவேளை
நீ இல்லாமல் எனக்கோர் வாழ்வில்லை
அறிவாய் நீயும் நிதர்சனமாய்
உன் கையால் பரிமாறும்
நீ சமைத்த உணவை நான் உண்டு
உனக்காகவே வாழ்கின்றேன் இவ்வுலகில்
உண்மை புரியும் உனக்கு
உன்னில் எனக்கு உரிமை உண்டென்றே
அடித்தேன் நானும் சில வேளை
இது உனக்குப் பிழையென்றால்
சொல்லிவிடு இப்போதே!

அழவில்லை நீர் என்னை அடித்ததற்காய்
உம் அன்பு புரிகிறது நல்லாவே
எனக்கும் உம்மேல் தீராத அன்புண்டு
என்றே உணர்த்த நானும்
அடிப்பேன் அடுத்த முறை நிட்சயமாய்
புரிந்து கொள்ளும் என்னவரே!!

No comments: