Saturday, January 5, 2008

இரட்டை முகம்

நட்பென்பது நானிலத்திலும் போற்றுதற்குரியது
புலம் பெயர் மண்ணில்
புரிந்தவர்கள் எத்தனை பேர்?
நட்புக்காய் தம் நாட்டையே
இழந்த மன்னர்கள் கதை பலவுண்டு
நண்பனுக்காய் உயிர் கொடுத்த பலர் கதைகள்
இன்றும் உண்டு எம் நாட்டில்
நட்பை விலை பேசும்
நயவஞ்சகக் கூட்டம் உண்டு எம்மிடையே
நாளுக்கு நாளாய் மாற்றுகின்ற
மலிவான சட்டை என்றே
எண்ணிடுவார் மதிகெட்டோர் நட்பினையே
நட்புக்கொண்டோர் மாறிடுவார்
நயவஞ்சகராய் சிலவேளை
தெரிந்துவிடும் அவர்தம் மற்ற முகம்
அப்போது தெளிவாக
உடைந்துவிடும் அடுத்தவர் நெஞ்சம் பலமாக
பெருகிடும் இரத்தவெள்ளம்
இதயத்தின் உட்புறமாய்
மாங்கல்யம் அணிவித்து மணமக்கள் சேர்வதற்கே
சட்டம்தான் துணை நிற்கும் ஆனால்...
நட்பிற்கு விட்டுக்கொடுப்பென்ற சாட்சியுடன்
மனச்சாட்சியே சட்டமாகிறது உணர்வாரா
புலம்பெயர் மண்ணிலே புகல்கின்ற தமிழர்கள்?

2 comments:

Anonymous said...

Amusing state of affairs

Anonymous said...

It is interesting. You will not prompt to me, where I can find more information on this question?