Friday, January 18, 2008

கேணல் கிட்டு

இழந்த எம் யாழ் மண்ணை மீட்டெடுத்து
சங்கிலியன் தவற விட்ட எம் ராச்சியத்தை
மீண்டும் சரித்திரமாக்கிய வீரனே
மறைந்தாய் நீ எம் மண்ணை விட்டு
ஆனாலும் மறையவில்லை நீ எம் மனதை விட்டு
உணர்ந்து கொள்வாய் உத்தமனே!
எம்மவர்க்கு உயிர் பெரிதல்ல
தமிழ் மானமே பெரிதென்று
அகிம்சை போதித்த அந்த வஞ்சகற்க்கு
ஆணித்தரமாய் உரைப்பதற்க்காய்
நீ கொடுத்த விலை
எண்ண எம் நெஞ்செல்லாம்
தீப் பிழம்பாய் கொதிக்கிறது
அன்று துவண்டு போன
தமிழர் மனமெல்லாம்
இன்னும் தவியாய்த் தவிக்கிறது
இழப்புக்களே எம் தலை விதியோ
என்று ஏங்கித் தவிக்கிறது!

கிட்டர் என்ற பெயர் கேட்டதுமே
கிடுகிடுத்து ஓடி ஒழித்திட்ட
சிங்கள ராணுவச் சிப்பாய்கள்
இன்று எம் யாழ் மண்ணில்
செய்கின்ற கொடுமைகளை
சொல்வதற்கே என் நெஞ்சு மறுக்கிறது
உண்ண உணவில்லை
உடுப்பதற்கு உடையும் இல்லை
பால்குடி மாறாப் பச்சிளம் குழந்தைகள்
பசி ஆற ஒன்றுமே அங்கில்லை
தள்ளாத வயோதிபர்கள்
வயதான பெரியோர்கள்
வாங்க ஓர் மருந்துமின்றி
வாடி வதைந்து மரணிக்கும் காட்சி
எல்லாமே
எம் இதயத்தை வெடிக்க வைக்கிறது
வானத்தே நின்று எம் கிட்டண்ணர்
வேதனை கொண்டு எல்லாமே பார்க்கின்றார்
அன்று கோட்டையிலே ஓடி ஒழிந்தவர்கள்
இன்று எம் யாழ் மண்ணில் துணிவுடன் நிற்கின்றார்
இவர்களை துரத்த
இன்னும் எவ்வளவு நாட்கள்பொறுக்கவேண்டும்!
இன்னும் பொறுமை காக்கவேண்டும்
கிட்டண்ணர் வானத்தே இருந்து கேட்பதெல்லாம்
எதிரொலியாய் இங்கு ஒலித்தே நிற்கிறது
விரைவில் முடிவொன்று வருமென்று
அண்ணர் பாலா அவருக்குச் சொல்வதெல்லாம்
எமக்கு நன்றாய் கேட்கிறது!


கிட்டர் என்றதுமே
கிட்டப் போய் கதைத்திடுவார் எல்லோரும்
கிலி பிடித்து ஓடிடுவார்
சிங்களத்தின் ராணுவங்கள்
கிட்டு மாமா என்று சொல்லி
சூழ்ந்து கொள்ளும்
குழந்தைகள் எல்லாமே அவரைச் சுற்றி
எல்லோற்கும் நண்பன் அவன்
எதிரிக்கு மட்டுமே பொல்லாத சூரன் அவன்

83 யூலையிலே
சிங்களக் காடையரின் இனவெறியில்
தமிழர் பட்ட வேதனைகள்
உன் உள்ளத்தை உலுக்கி எடுத்ததனால்
பூகம்பம் ஆனாய் நீ
யாழ் மண்ணின் தளபதியாய்
தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் ஆட்சிதனை
அளித்தவன் நீ
குறிதவறாது சுடுவதிலே சூரன் நீ
மேடை பேச்சினிலே மேதாவி நீ
இலக்கியவாதி நீ
எல்லாம் தெரிந்த தமிழ் வீரன் நீ

எதிரியினால் வெல்லவே முடியாத
எம் கிட்டண்ணர்
கால் ஒடிந்த போதிலுமே
மனம் ஒடிந்து போனதில்லை
தமிழ் ஈழம் நோக்கி
சமாதானத் திட்டத்துடன்
பயணித்த எம் வீர வேங்கைகளை
பொல்லாத இந்தியர்கள்
கேட்டார்கள் சரணடைய வேண்டுமென்றே
நாசகார இந்தியாவின்
நாசகாரிக் கப்பல்கள்
சூழ்ந்ததுமே எடுத்திட்டார் தம் உயிரை
எம் பத்து வேங்கைகளும்
கிட்டுவும் மற்றவரும்
மாவீரர் ஆகிவிட்டார் இந்தியாவின் சதியினிலால்
அகிம்சயை அறிமுகம் செய்தவர்கள்
எம் வீரர் குருதியில்
குளித்து மகிழ்ந்திட்டார்

தமிழ் ஈழம் மலர்வது உறுதி
யாழ் மண்ணில் நம் தமிழர்
ஆட்சி அரங்கேறும் விரைவாக
நல்லாட்சிகண்டு மகிழ்வீர்
வானத்தின் மீதிருந்தே!

1 comment:

Anonymous said...

//மேடை பேச்சினிலே மேதாவி நீ
இலக்கியவாதி நீ
எல்லாம் தெரிந்த தமிழ் வீரன் நீ//

lot people especially Tamil Nadu tamils like to think LTTE is just a mindless fighting force but they encourage their soliders (yes soliders NOT terrorists)learn anything and everything.