Tuesday, January 15, 2008

தைப்பொங்கல்

தைப்பொங்கல்
இது தமிழர் பொங்கல்
தரணியெல்லாம் வாழும் நம் தமிழர்
போற்றிப் பொங்கிடும் பொங்கல்
தமிழனின் புதுவருடம்
பிறக்கிறது தைப்பொங்கலிலே

உலகமெங்கும் பிறக்கிறது புதுவருடம்
இளவேனிற் காலமதில்
நம் தமிழர் புது வருடம்
இளவேனில் காலமதில் வருகை தர
எமை ஆண்ட ஆரியர்கள்
வஞ்சனையாய் புகுத்திட்டார்
புதுவருடமதை சித்திரையில்
ஏமாந்த தமிழர்கள்
மறந்திட்டார் எம் புதுவருடமதை
ஆரியர்கள் திணித்திட்ட
அவலங்கள் ஆயிரத்தில்
இதுவும் ஒன்று
உணர்வார்களா எம் தமிழர்

வள்ளுவன் ஆண்டு நம் ஆண்டு
தை ஒன்றில் பிறக்கும் நம் புது ஆண்டு
தமிழர் திருநாள் எம் பெருநாள்
தைப்பொங்கல் மட்டுமேதான்
உறைக்கவே சொல்லிடுங்கள்
எம் பிள்ளைகட்கு
சித்திரை வருடக் கொண்டாட்டம்
ஓர் வீணாட்டம்
மறப்போம் அதையே
மறத் தமிழினமாய்
வரவேற்போம் எம் புது வருடத்தை
தைப் பொங்கல் தினத்தினிலே

தையிலே பொங்கலிட்டோம்
சூரியனை வணங்கி நின்றோம்
இயற்கையை மதித்தவர் நாம்
இயற்கையே நம் தோழன்
அவனே நம் கடவுள்
இயற்கையை அழித்தால்
கோவம் கொள்வான் அவன் என்றே
சொல்லி வைத்தான் தமிழன் அன்று
இன்று உணர்கின்றார் உலகத்தோர்
இயற்கை கோவம் கொண்டால்
மனிதரெல்லாம் அழிவார்கள்
மாசு படுத்தாதே சுற்றாடலையே
சொல்லி வைத்தான் தமிழன் திடமாக

இயற்கையை மதிக்கவில்லை
உலக மாந்தர்
வெட்டினார் காடுகளை
மிக வேகமாக
ஓட்டினார் கார்களையே
தேவைக்கு அதிகமாக
சமையலுக்கு, துணி துவைத்திட
குளிரூட்ட
எல்லாமே இயந்திரமயமாக
கரியமில வாயு கசிந்து வந்தே
நச்சாக்கியதே இயற்கைதனை

வெப்பம் உயர்கிறது
பூமிப் பந்தினிலே
புயல் சுனாமி பூமி அதிர்வு
அளவில்லா வெள்ளம்
அடிக்கடி நிகழ்கிறது
மனித குலமே
அழிகின்ற அலங்கோலம்
அரங்கேறும் காலம்
வெகு தொலைவில் இல்லை

இயற்கையை வணங்கினால்
இன்னல்கள் தீரும் உறுதி இது
இதை நாம் மதித்தால்
வாழ்வு வழம் பெறும்
மனிதகுலம் மாண்பு பெறும்
தைப் பொங்கல் கூறுவது
இதையே தான்
தமிழர் திருநாள் பெருமை
புரிகிறது நமக்கெல்லாம்

வரவேற்றிடுவோம் தைப் பொங்கலையே
புது வருடப் பொங்கலுடன்
போகிப் பொங்கல் மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
எல்லாப் பொங்கலையும்
வாழ்த்தி வரவேற்போம்!

No comments: