Tuesday, February 26, 2008

ஏன் இந்த வேதனை?

மனத்துள்ளே ஓர் ஆயிரம் சுமைகள்
இதயத்தின் பாரத்தை இன்னும் அதிகமாக்கி
அளவில்லா வேதனையைத் தருகிறது
என் உள்ளே!
ஏன் இந்த வேதனை? எனக்கேன் இந்த வேதனை?
கேட்டுவிட்டேன் இந்தக் கேள்விதனை
ஒர் ஆயிரம் முறை
விடை காண முயன்று முயன்றே
தோற்றுவிட்டேன் நானும் இன்றளவும்

இதயம் அழுகிறதே! மனம் துடிக்கிறதே!
உடலில் ஓர் துன்பமில்லை
ஆனால் உள்ளத்தில்
உயிர் போவதுபோல் ஓர் வேதனை
காரணத்தைத் தேடினேன்! தேடினேன்!
இப்போதான் புரிந்து கொண்டேன்
உன்னிடம் தந்த என் இதயத்தை
உடைத்து நொருக்கி விட்டு
தந்துவிட்டாய் மீண்டும் என்னிடமே
திருத்த முடியா என் இதயத்தை
திருத்துவதற்காய் அலைந்தேன்
முடியுமட்டும்
புரிந்து கொண்டேன் இப்போது
உன்னிடம் மாத்திரமே உண்டு
என் உள்ளத்தின் நோய் தீர்க்கும்
அருமருந்து
தருவாயா? என் அருகே வருவாயா?

No comments: