Saturday, February 23, 2008

மனைவியும் நாயும்

அன்று அவன் வாழ்வு
எல்லாமே இனிமைதான்
வாழ்வின் வசந்தத்தை
மேலாக அனுபவித்தான்
அன்பான மனைவியும்
நன்றியுள்ள நாயும்
அவனிடம் இருந்ததனால்
குறைவில்லா உல்லாசம்
கூதுகலமான இல்வாழ்க்கை
நன்றி சொல்வான் என்நாளும்
ஆண்டவனுக்கே
இவ் வாழ்வை அளித்ததற்காய்

களைப்புடன்
வேலையால் வரும்போது
அன்பு மனைவியவள்
கொடுத்திடுவாள்
இனிய முத்தமொன்று
நன்றியுள்ள நாயோ
குரைத்தே
தன் மகிழ்ச்சியினை
சொல்லி நிற்கும்
அவனுக்கோ
களைப்பெல்லாம் தீர்ந்து போகும்
உற்சாகம் பொங்கி வரும்

இன்றும்.............
அவன் வேலையால் வரும்போது
முத்தமும் கிடைக்கிறது
குரைத்தலும் நடக்கிறது
ஒரே ஒரு மாற்றம்
மனைவி இப்போ குரைக்கின்றாள்
நாயோ அன்பாய்
தன் நாவினால் நக்கி
முத்தம் கொடுக்கிறது

காலம் செய்த கோலம்
பத்து வருடம் போனதினால்
மனைவி அவள் மாறிவிட்டாள்
கடுகடுப்பாய் குரைக்கின்றாள்
நாயும் மாறியது
பத்து வருடம் போட்ட உணவிற்காய்
நன்றியுடன் முத்தம் இடுகிறது
மனிதர்களே நாய்களையும்
கெடுத்து விடாதீர்
அவன் மனமொடிந்து போய்விடுவான்.

No comments: