Monday, March 29, 2010

இரு முறை பிறந்தேன்

அம்மாவின் வயிற்றினிலே
பத்து மாதங்கள்
சுகமாய் தரித்திருந்து
இப் பூமிப் பந்தினில்
முதல் முறையாய்
பிறந்தேன் நான்
காலங்கள் ஓடியது
கல்யாணம் செய்துகொண்டேன்
வேதனைகள் சோதனைகள்
ஒவொன்றாய் வந்தபோது
ஒடிந்து போனேன்
நான் நானாக இல்லாதபோது
உயிர் தந்தாள்
வாழ வழி தந்தாள்
என் அன்பு மனைவியுமே
பிறந்தேன் நானும்
இரண்டாம் முறையாக!

No comments: