நள்ளிரவு கண் விழித்தேன்
அப்பா அப்பா என்ற குரல் கேட்டு
அழுது துவண்டாய்
நோத் தாங்காமல் என் மகளே
என்....
கண்கள் அழுதன
கண்ணீர் சொரிந்தது
இதயம் கனத்தது
இரத்தம் உறைந்தது
இரவு அப்படியே இருந்தது
பகல் தொலைந்தது
உன் துயர் கண்டு
பார்வை மங்கிப் போனது
தூக்கமில்லா இரவுகள்
இன்பமில்லாப் பொழுதுகள்
எதையும் செய்யவில்லை
நான் நானாக....
அந்த ஓர் மாதம்...
என் அருமை மகளே
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் உள்ளம் வடிக்கும்
இரத்தக் கண்ணீரை
நீ கலங்கி நான் பார்த்தால்
என் இதயம்
உடைந்துவிடும் சுக்கு நூறாக
காலையிலும் மாலையிலும்
உன் கனிவான முகத்தை
பார்த்தே நாம் மனம் மகிழ்வோம்
நீ இல்லா ஒவ்வோர் நிமிடமுமே
எம் வீட்டில் ஓர் யுகமாகும்
ஓர் மாதம் நீ பட்டாய் வேதனைகள்
ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டே
இயற்கையின் சோதனையோ
விதியின் விளையாட்டோ
யாம் அறியோம்
நீ சுகமாய் திரும்பி வந்ததற்காய்
சொல்கிறோம் நன்றிதனையே
இயற்கை அன்னைக்கே!
Friday, November 6, 2009
தூக்கமில்லா இரவுகள்
Posted by
பொன் சிவராசா
at
9:31 AM
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment