Tuesday, June 17, 2008

என்னை நான் தேடுகிறேன்

தாயகத்தில் அன்று நான்
நானாக இருந்தேன் மகிழ்வாக
இன்று புலம் பெயர்நாட்டில்
நான் நானாக இல்லை என்பதனால்
என்னைத் தேடுகிறேன் என்னாளும்
வேறு சிலருக்காய் வாழ்கின்றேன்
இங்கே புதிய மனிதனாய்
மனிதப் பண்புகளை
மதித்தார்கள் அங்கே
மனிதன் பணப்பையை
மதிக்கிறார்கள் இங்கே
அதனால் என்னையே நான்
மாற்றிக்கொண்டேன் இவர்களுக்காய்
இப்போ தேடுகிறேன் என்னையே நான்!

No comments: