Friday, November 30, 2012

மூடிய விழிகள்


மூடிய விழிகள்
தூக்கமில்லா உள்ளம்
கனவுகள் அல்ல
கனத்த இதயம்
பேசியது என்னுடனே
அந்த நடு ராத்திரியில்
நல்லவர் போல் வேசம்
வல்லவர் போல் நடிப்பு
பகட்டான வாழ்க்கை
தற்பெருமைப் பேச்சு
இரந்து வேண்டும்
பட்டங்கள் பதவிகள்
அரசியல் வாதியையும்
அதி பணக்காரரையும்
அண்டிப் பிழைக்கும்
அவலம்
அடுத்தவன் துன்பத்தை
அசை போட்டு மகிழும்
மனிதர்கள்.....
மூடிய விழிகள்
தூக்கமில்லா உள்ளம்

1 comment:

Anonymous said...

Hi tҺere, cοnstantly i used to check weblog posts here
early in thе dawn, as i enjοy to gain knowlеdge of more and more.



my webpage - market share reporter