Friday, November 30, 2012

ஏன் வேண்டும் விவாகரத்து


நீதிமன்றில் ஓர் வழக்கு
மனைவி அவள்
சுமத்துகிறாள் பல குற்றங்கள்
கணவன் மீது
வீட்டு வாடகையின்
அரைப் பங்கு
ஆறு மாதமாய் தரவில்லை
சமையல் வேலையில்
சரி பாதி சரியாகச்
செய்வதில்லை
காருக்குப் பெற்றோல்
அடிப்பதில்
கணக்குப் பிழைக்கிறது
கேட்டால்
இப்போ வருமானம்
சரியாக இல்லை என்கின்றார்
விவாகரத்து வேண்டுமென்றாள்
இடை மறித்த நீதிபதி
கேட்டார்
ஏன் வேண்டும் விவாகரத்து
பிரிய வேண்டும் உடனே
சொன்னாள் மனைவியவள்
சிரித்தார் நீதிபதி
இனி என்ன பிரிவு
வேண்டும் உமக்கு
எல்லாமே பிரிவாகத் தானே
இருக்கிறது
குடும்பம் என்றால்
எல்லாமே கூட்டுப்
பொறுப்புத்தான்
விட்டுக் கொடுப்புக்கள்
உனது எனது என்றில்லாமல்
எல்லாமே எமது
என்பது தான் குடும்பம்
எப்போ என் பணம் உன் பணம்
என்று கூறு வந்தாச்சோ
அன்றே பிரிவு
ஆரம்பமாகிறது
அதுவே விவாகரத்தில்
முடிகிறது..
கூறிச் சிரித்தார்
மீண்டும் நீதிபதி

No comments: