Monday, April 14, 2008

வாழ்க்கை

மனித வாழ்க்கை
மாயத்தில் மட்டுமே நடக்கிறது
நடிக்கிறார்கள் எல்லோரும் நல்லாவே
காதல் இல்லையேல் சாதல்
புலம்பிடுவார்
தம் காம இச்சைகளைத் தீர்ப்பதற்காய்
ஈருடல் ஓர் உயிர் என்றே
வாழ்ந்திடுவார் கணவன் மனைவியுமாய்
அதில் ஒருவர் இறந்திட்டால்
அடுத்த கல்யாணம் செய்வதற்காய் துடித்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மக்களுக்குச் சேவை செய்கிறேன் பார் என்று
சேகரிப்பார் வாக்குக்கள் நல்லாவே
வென்றிடுவார் தேர்தலிலே
ஆகிடுவார் மந்திரியாய்
மறந்திடுவார் அம் மக்களையே
ஊழல்கள் புரிந்தே
உல்லாச வாழ்க்கை வாழ்ந்திடுவார்
எல்லாமே நாடகம்தான்

மகிழ்வாய் இருப்பதாய்
தம்மையே ஏமாற்றி
வாழ்ந்திடுவார் பல பேர்
புலம் பெயர் நாட்டினிலே
இரண்டு வேலை செய்திடுவார்
வீட்டுக்கடன் வட்டியைக் கட்டிடுவார்
மிகுதி ஒன்றும் இல்லாமல்
அல்லல் பட்டிடுவார்
வசதியாய் இருப்பது போல்
நடித்திடுவார்
எல்லாமே நாடகம் தான்

உள்ளே அழுகின்ற
ஆயிரம் ஆயிரம் எம்மவர்கள்
வெளியே சிரித்தபடி
உலாவருகின்றார் மற்றவர்க்காய்
உலகமே நாடக மேடை
சொன்னார்கள் பெரியவர்கள்
நடிக்கின்றோம் நாம் எல்லாம்
எல்லாமே நாடகம் தான்

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Monitor de LCD, I hope you enjoy. The address is http://monitor-de-lcd.blogspot.com. A hug.